புத்தளத்தில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட 19 வயது பெண்!

புத்தளத்தில் 19 வயதுடைய பெண்ணொருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் இன்றைய தினம் (17-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், இபுனுபதுதா வீதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.